சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
430   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 545 )  

தேதென வாச முற்ற

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானன தான தத்த தானன தான தத்த
     தானன தான தத்த ...... தனதான

தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
     தேனளி சூழ மொய்த்த ...... மலராலே
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
     சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
     போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த
     பூவையை நீய ணைக்க ...... வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
     மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா
வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
     வாரண மான தத்தை ...... மணவாளா
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
     வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
     வேலடை யாள மிட்ட ...... பெருமாளே.
Easy Version:
தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு தேன் அளி
சூழ மொய்த்த மலராலே
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா
எறிக்கும் அனலாலே
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத
ராஜனுக்கும் அழியாதே
போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை
நீ அணைக்க வர வேணும்
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும்
ஆதரிக்கும் அயில் வீரா
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான
தத்தை மணவாளா
மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி
நிற்கு(ம்) முருகோனே
மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில் வேல்
அடையாளம் இட்ட பெருமாளே.
Add (additional) Audio/Video Link

தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு தேன் அளி
சூழ மொய்த்த மலராலே
... ஒளி உடையதாய், நறுமணம்
கொண்டதாய், விநோதமான இசையை விரும்பும் தேனீக்கள் சூழ்ந்து
மொய்ப்பதான பூக்களாலும்,
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா
எறிக்கும் அனலாலே
... கோபித்து எழும் பாம்பின் பற்களில் ஊறிய
விஷத்தைக் கக்குகின்ற குளிர்ந்த நிலா வீசும் கதிர்களின் நெருப்பாலும்,
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத
ராஜனுக்கும் அழியாதே
... தாமரைப்பூவில் வீற்றிருக்கும் நீதி
இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை
ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல்,
போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை
நீ அணைக்க வர வேணும்
... பலவித இன்பங்களையும் நிறையத்
தந்து, (உன் மீது) காதல் ஆசை மிக்குள்ள இந்தப் பெண்ணை நீ
அணைக்க வர வேண்டும்.
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும்
ஆதரிக்கும் அயில் வீரா
... கங்காதேவியை சடையில் தரித்த
தலைவனான சிவபெருமானும், போற்றப்படுகின்ற மரகதப் பச்சை நிறம்
கொண்ட திருமாலும் விரும்புகின்ற வேலாயுத வீரனே,
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான
தத்தை மணவாளா
... தேவர்களுடைய சேனை எல்லாம் சூழ்கின்ற
இந்திரனுடைய தலைநகர் அமராவதியில் (ஐராவதம் என்னும்)
யானையால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானைக்கு கணவனே,
மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி
நிற்கு(ம்) முருகோனே
... உலகத்தில் உள்ளவர்கள் செழிப்புற வாழ
திருவண்ணாமலையின் தெருக்களில் விரும்பி வீற்றிருக்கும் முருகனே,
மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில் வேல்
அடையாளம் இட்ட பெருமாளே.
... மேரு மலையை பொடியாக்கி,
பிரமனுடைய காலில் வேல் கொண்டு விலங்கிட்ட பெருமாளே.

Similar songs:

430 - தேதென வாச முற்ற (திருவருணை)

தானன தான தத்த தானன தான தத்த
     தானன தான தத்த ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song